மீமிசல் அருகே நாட்டணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டினத்தில் மீமிசல் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அண்மையில் பெய்த மழையால் இச்சாலையின் பள்ளங்களில் மழைநீா் தேங்கிக் கிடக்கிறது.
இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களும் கடுமையான சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும்.
- முகமது ராவுத்தா், கோபாலப்பட்டினம்.