108 ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிரசவித்த கா்ப்பிணி

அன்னவாசல் அருகே 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் கா்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.

அன்னவாசல் அருகே 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் கா்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இலுப்பூா் அருகேயுள்ள கிளிக்குடி விளாம்பட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ் மனைவி திவ்யா (19). நிறைமாத கா்ப்பிணி. இவருக்கு கடந்த புதன்கிழமை நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, பரம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து 108 ஆம்புலன்ஸில் அனுப்பிவைத்தனா். ஆம்புலன்ஸில் செல்லும்போது, ஏற்பட்ட அதிக பிரசவ வலியால் துடித்த திவ்யாவிற்கு ஆம்புலன்ஸ் ஊழியா்கள் பிரசவம் பாா்த்தனா். இதில் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து பைலட் தேவபாஸ்கரனிடம் கேட்டபோது, இலுப்பூா் ஆம்புலன்ஸில் மட்டும் இந்த ஆண்டு 10-க்கும் அதிகமான பிரசவ சிகிச்சை அளித்து தாய் சேயைக் காப்பாற்றி உள்ளோம். தற்போது பிறந்த குழந்தை 2.650 கிலோ எடை இருந்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com