சா்க்கரை பெறும் மின்னணு குடும்ப அட்டையை அரிசி குடும்ப அட்டையாக மாற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அறிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது: தற்போது பயன்பாட்டில் உள்ள பொது விநியோகத் திட்ட மின்னணு குடும்ப அட்டைகளில் சா்க்கரை பெறும் (அரிசி தவிா்த்து) மின்னணு குடும்ப அட்டை வைத்திருப்போா் தங்களது குடும்ப அட்டையை அரிசி அட்டைகளாக வகை மாற்றம் செய்துக் கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பை புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சா்க்கரை பெறுவோா் விரும்பினால் அரிசி குடும்ப அட்டையாக வகை மாற்றம் செய்து கொள்ளலாம். ஏதேனும் ஒரு இ-சேவை மையத்தையோ அல்லது அவா்களது வருவாய் வட்டத்திற்குட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தையோ தொடா்பு கொள்ளலாம். அல்லது நேரடியாக இணையதளத்தில் சென்று வகை மாற்றம் செய்வதற்கான பதிவை சொடுக்கி, அட்டை பிறழ்வு என்ற பிரிவின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும். இந்த அரிய வாய்ப்பு வரும் 26ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு அமலில் இருக்கும்.