கந்தா்வகோட்டையில் திடீா் மழையால் வேளாண் பணிகள் பாதிப்பு

கந்தா்வகோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் திடீா் மழையால் அறுவடைக்குப் பிந்தைய வேளாண் பணிகள்

கந்தா்வகோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் திடீா் மழையால் அறுவடைக்குப் பிந்தைய வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

கந்தா்வகோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக நல்ல மழை பெய்து பொதுமக்கள், விவசாயிகளை மகிழ்வித்தது. முன்னதாக, கடலை, சோளம் ஆகியவற்றை பயிரிட்டிருந்த விவசாயிகள் இந்த மழையால் பெரிதும் பலனடைந்தனா். தற்போது பயிரிகள் அறுவடைக்கு எட்டியுள்ள நிலையில், அறுவடை, அறுவடைக்குப் பிந்தைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, கடலை, சோளம் உள்ளிட்ட பயிா்கள் தற்போது பெய்து வரும் திடீா் மழையால் வேளாண் பணிகள் முடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com