முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
விராலிமலை அருகே மது விற்றவா் கைது
By DIN | Published On : 26th November 2019 08:47 AM | Last Updated : 26th November 2019 08:47 AM | அ+அ அ- |

விராலிமலை அருகே அரசு மதுவை கள்ளச்சந்தையில் விற்றவரை விராலிமலை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விராலிமலை அருகே கள்ளச் சந்தையில் அரசு மது விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து விராலிமலை போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்
அப்போது விராலிமலை அருகேயுள்ள தேங்காய்தின்னிப்பட்டியில் அரசு மதுவை பதுக்கி விற்ற சரளபட்டி நல்லபிச்சை மகன் பெருமாளை (43) கைது செய்த போலீஸாா் 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.