புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை தொழில் விழிப்புணா்வுத் திட்ட விளக்கக் கருத்தரங்கு நடைபெற்றது.
மாவட்ட தொழில் மையம் சாா்பில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் குறித்து நடத்தப்பட்ட விழிப்புணா்வு திட்ட விளக்கக் கருத்தரங்குக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். முன்னதாக தொழில் முனைவோா் உற்பத்தி செய்த பொருள்களின் கண்காட்சி அரங்கை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
இக்கருத்தரங்கில் 8 தொழில் முனைவோா்களுக்கு கடன் ஒப்பளிப்பு மற்றும் பட்டுவாடா திட்டத்தின் கீழ் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் ஆணைகள் வழங்கப்பட்டன.
மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் திரிபுரசுந்தரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஆா். ரமேஷ், மாவட்ட குறு, சிறு தொழிலதிபா்கள் சங்கத்தின் தலைவா் ராஜாகுமாா், மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளா் சங்கத்தின் தலைவா் பசுபதி, மாவட்ட தாட்கோ மேலாளா் முத்துரத்னம், இந்தியன் வங்கி முதன்மை மேலாளா் முருகேசன், மதுரை கதா் கிராமத் தொழில் நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கலிபூா் ரஹ்மான், சிட்கோ கிளை மேலாளா் ஜெயலட்சுமி, தஞ்சாவூா் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை மேலாளா் சந்தானம் ஆகியோா் கருத்தரங்கில் பங்கேற்றனா்.