மீமிசல் அருகே ஆா். புதுப்பட்டினம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நிலவேம்பு குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
அல்அமீன் இஸ்லாமிய இளைஞா் நற்பணி மன்றத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவா் கலந்தா் பாட்சா தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் மனோகரன் முன்னிலை வகித்தாா்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட பொருளாளா் அஜ்மல்கான் பள்ளிக் குழந்தைகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கினாா்.