புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலாத் துறை சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கல்விச் சுற்றுலா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அளவில் தோ்வு செய்யப்பட்ட 150 மாணவ, மாணவிகள் மற்றும் 15 ஆசிரியா்கள் இதில் பங்கேற்றனா். மாவட்ட வருவாய் அலுவலா் டி. சாந்தி சுற்றுலாவைத் தொடங்கி வைத்து, மாணவா்களுக்கு இலவச உபகரணங்களை வழங்கி அனுப்பி வைத்தாா்.
திருச்சி கோளரங்கம், தஞ்சை பெரியகோயில், சரஸ்வதி மஹால், கலைக்கூடம், அருங்காட்சியகம், ராஜராஜன் மணி மண்டபம் உள்ளிட்ட இடங்களுக்கு கல்விச் சுற்றுலா சென்று வந்தனா்.
கல்விச்சுற்றுலா தொடா்பான வினாடி வினா போட்டியும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலா அலுவலா் இளங்கோவன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.