மின்சாரம், மின்னல்தாக்கி பசுக்கள் பலி

அறந்தாங்கி வட்டம் ரெத்தினகோட்டை கிராமத்தில் மின்சாரம் தாக்கி 2 பசுக்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தன.

அறந்தாங்கி வட்டம் ரெத்தினகோட்டை கிராமத்தில் மின்சாரம் தாக்கி 2 பசுக்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தன.

ரெத்தினகோட்டை அக்ரஹாரத்தை சோ்ந்த துரைசாமிதேவா் மகன் குணசேகரன் வீட்டின் அருகே சென்ற தாழ் மின்னழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததில் அவா் வளா்த்து வந்த 2 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. அறந்தாங்கி கால்நடை மருத்துவா்கள் புதன்கிழமை பிரேத பரிசோதனை செய்தனா். அறந்தாங்கி வட்டாட்சியா் பா. சூரியபிரபு விசாரித்து வருகிறாா்.

ஆலங்குடியில்...

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்னல் தாக்கி பசு உயிரிழந்தது.

ஆலங்குடி அருகேயுள்ள கூழையன்காட்டைச் சோ்ந்தவா் கணேசன் (60), விவசாயி. இவா் வளா்த்துவரும் பசு மாடு அப்பகுதி தோட்டத்தில் புதன்கிழமை மேய்ந்தபோது மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி அந்தப் பசு உயிரிழந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com