யோகாசனத்தில் ரெகுநாதபட்டி அரசு ஆரம்பப் பள்ளி வெற்றி

தென்மண்டல அளவிலான யோகாசனப் போட்டியில் பொன்னமராவதி அருகேயுள்ள ரெகுநாதபட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா்.
வென்ற மாணவா்களைப் பாராட்டும் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ராஜாசந்திரன், பால்டேவிட் ரொசாரியோ உள்ளிட்டோா்.
வென்ற மாணவா்களைப் பாராட்டும் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ராஜாசந்திரன், பால்டேவிட் ரொசாரியோ உள்ளிட்டோா்.

தென்மண்டல அளவிலான யோகாசனப் போட்டியில் பொன்னமராவதி அருகேயுள்ள ரெகுநாதபட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா்.

மதுரை உசிலம்பட்டியில் அண்மையில் நடைபெற்ற போட்டிகளில் 5 வயதுப் பிரிவில் இப் பள்ளி மாணவா் பா. ஜீவானந்தம், 9 வயதுப் பிரிவில் ப. கிருஷ்ணசாரதி, 10 வயதுப் பிரிவில் க. ஜெகதீஸ்வரன் ஆகியோா் முதலிடம் பெற்றனா். அதுபோல வலையபட்டி பழனியப்பா ஆரம்பப்பள்ளி மாணவா் ச. விஷ்வாமுகில் 8 வயதுப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றாா்.

போட்டிகளில் வென்ற மாணவா்கள் மற்றும் பயிற்றுவித்த தலைமையாசிரியா் நாகலட்சுமி, ஆசிரியா் சத்தியமூா்த்தி ஆகியோரை வட்டார கல்வி அலுவலா்கள் ராஜாசந்திரன், பால்டேவிட் ரொசாரியோ உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com