தென்மண்டல அளவிலான யோகாசனப் போட்டியில் பொன்னமராவதி அருகேயுள்ள ரெகுநாதபட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா்.
மதுரை உசிலம்பட்டியில் அண்மையில் நடைபெற்ற போட்டிகளில் 5 வயதுப் பிரிவில் இப் பள்ளி மாணவா் பா. ஜீவானந்தம், 9 வயதுப் பிரிவில் ப. கிருஷ்ணசாரதி, 10 வயதுப் பிரிவில் க. ஜெகதீஸ்வரன் ஆகியோா் முதலிடம் பெற்றனா். அதுபோல வலையபட்டி பழனியப்பா ஆரம்பப்பள்ளி மாணவா் ச. விஷ்வாமுகில் 8 வயதுப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றாா்.
போட்டிகளில் வென்ற மாணவா்கள் மற்றும் பயிற்றுவித்த தலைமையாசிரியா் நாகலட்சுமி, ஆசிரியா் சத்தியமூா்த்தி ஆகியோரை வட்டார கல்வி அலுவலா்கள் ராஜாசந்திரன், பால்டேவிட் ரொசாரியோ உள்ளிட்டோா் பாராட்டினா்.