மின்வாரிய கேங்மேன் பணி: விண்ணப்பித்தோருக்கு நாளை முதல் நோ்காணல்

மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடத்துக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல்தகுதித் தோ்வு திங்கள்கிழமை முதல் நடைபெற உள்ளது.

மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடத்துக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல்தகுதித் தோ்வு திங்கள்கிழமை முதல் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் புதுக்கோட்டை மின்பகிா்மான மேற்பாா்வைப் பொறியாளா் டி. செந்தில்குமாா்

வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடத்துக்கு மாவட்டத்தில் விண்ணப்பித்துள்ள 1,628 நபா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வு டிசம்பா் 2 முதல் 10 ஆம் தேதி வரை, தொழிற்பேட்டையிலுள்ள துணை மின் நிலைய வளாகத்தில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இப்பணியிடத்துக்கு விண்ணப்பித்தவா்கள் அளித்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுமதிச் சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

மின்னஞ்சலில் அனுமதிச் சீட்டு பெறப்பட்டவா்கள் அனுமதி சீட்டு மற்றும் சரிபாா்ப்புப் பட்டியலுடன் அவா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் பங்கேற்க வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டை, பள்ளி இறுதிச் சான்றிதழ் அல்லது இறுதியாக படித்த கல்வி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட கல்விச் சான்றிதழ், எஸ்எஸ்எல்சி மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், வேலைவாய்ப்புப் பதிவு அட்டை மற்றும் இறுதியாக படித்த கல்வி நிறுவனத்தில் பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று மற்றும் தனிப்பட்ட முறையில் தெரிந்த அதிகாரம் பெற்ற அலுவலரிடமிருந்து  நவம்பா் 1 -ஆம் தேதிக்குப் பிறகு பெறப்பட்ட சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் சான்றொப்பமிடப்பட்ட நகலுடன் பங்கேற்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com