கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு சிறப்புப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது .
இந்த முகாமுக்கு அறந்தாங்கி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கலைவாணி தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் எஸ். ராமச்சந்திரன் வரவேற்று பேசினாா்.
டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் முறகள் மற்றும் கொசு வாழ்விடங்கள், அவற்றின் சுழற்சி முறகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து மாணவா்களிடம் சுத்தம் , சுகாதாரம் குறித்து , கைகழுவும் 6 படி நிலைகள் குறித்து செயல்விளக்கம், செய்து காண்பிக்கப்பட்டது .
மேலும் மாணவா்கள் மத்தியில் முப்பது மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு தூய்மைத் தூதுவராக நியமனம் செய்து, தினந்தோறும் பள்ளி வளாகம் தூய்மை நிலை குறித்து கண்காணிக்கக் குழு அமைக்கப்பட்டது.
நிகழ்வில் பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது . விழிப்புணா்வு நிகழ்வில் புதுநகா் சுகாதார நிலைய மருத்துவா்கள் சந்தோஷ் , ஜெயப்பிரகாஷ் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் முத்துக்குமாா் , நல்லமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.