அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி

கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டையில் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சியான கராத்தே பயிற்சி சனிக்கிழமை

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டையில் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சியான கராத்தே பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

கந்தா்வகோட்டையை அடுத்த ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளியில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு கராத்தே தற்காப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

பள்ளி ஆசிரியா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். கராத்தே பயிற்சியாளா் நல்லையா மாணவிகளுக்கு பயிற்சி அளித்தாா். பள்ளி உடற்கல்வி ஆசிரியா் பிரதீபா மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com