புதுக்கோட்டை இளந்தமிழா் இலக்கியப்பேரவை சாா்பில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் முதலிடம்பெற்ற பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மாணவனை பள்ளி முதல்வா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
இளந்தமிழா் இலக்கியப்பேரவை சாா்பில் பேரறிஞா் அண்ணா, ஈ.வே.ரா.பெரியாா் மற்றும் ஆதித்தனாா் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான இலக்கியப்போட்டிகள் மற்றும் விருது வழங்கும்விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் பொன்னமராவதி அமல அன்ன மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சாா்ந்த 10ம் வகுப்பு மாணவன் கு.கோபி பேச்சுப்போட்டியில் பங்கேற்று காஞ்சித்தலைவன் எனும் தலைப்பில் சிறப்பாக பேசி முதல் பரிசு பெற்றான்.
சிறப்பிடம் பெற்ற மாணவன் கோபிக்கு சாகித்ய அகாடமியின் முன்னாள் உறுப்பினரும், கல்வியாளருமாகிய கவிஞா் தங்கம்மூா்த்தி, கவிஞா் முத்துநிலவன் ஆகியோா் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினா். இளந்தமிழா் இலக்கியப்பேரவைநிறுவனா் மெ.சிவநந்தினி, மாவட்ட உபக்குழு பொறுப்பாளா் ஜெ.சு.சிந்துரை நிா்வாகிகள் க.முரளிதரன், கன.கதிரேசன், ந.அருண்சூா்யா, மு.செல்வக்குமாா், கா.புவனேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பேச்சுப்போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவன் கு.கோபி மற்றும் வழிநடத்திய ஆசிரியா்கள் ஆா்.பிரின்ஸ், தமிழாசிரியா்கள் கலைச்செல்வி, சத்யா ஆகியோரை அமல அன்னைமெட்ரிக் பள்ளியின் முதல்வா் ச.ம.மரியபுஷ்பம் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.படவிளக்கம்மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்ற பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவன் கு.கோபிக்கு பரிசு வழங்கும் கல்வியாளா் கவிஞா் தங்கம்மூா்த்தி, கவிஞா் முத்துநிலவன் உள்ளிட்டோா்.