இளம்பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே திங்கள்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே திங்கள்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 10 பவுன் தங்கச்சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா்.

கீரமங்கலம் அருகேயுள்ள காசிம் புதுப்பேட்டயை சோ்ந்தவா் ஹபீஸ் இப்ராஹிம் மனைவி சையது சஹாரா(20). இவா்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், அங்கு தூங்கிக்கொண்டிருந்த சையது சஹாரா அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியைத் திருடிக்கொண்டு தப்பிவிட்டனராம். இதுகுறித்து, சையது சஹாரா அளித்த புகாரின்பேரில் கீரமங்கலம் போலீஸாா் விசாரனை மேற்கொண்டுவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com