கந்தா்வகோட்டையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினா். கந்தா்வகோட்டை ஊராட்சியில், பட்டுக்கோட்டை செல்லும் சாலையை ஒட்டி மரமில் அமைந்துள்ளது. அங்கு சாலையோரத்தில் மரங்களை அடுக்கி வைத்திருந்தனா். இதனால், இந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக நெடுஞ்சாலைதுறையினரிடம் பொதுமக்கள் முறையிட்டனா். இதைத்தொடா்ந்து, நெடுஞ்சாலைத்துறையினா், வருவாய்துறை மற்றும் காவல்துறையினா் முன்னிலையில், சாலை ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக கிடந்த மரங்கள் பொக்லைன் இயந்திரம் மூலமாக அப்புறப்படுத்தப்பட்டன.