அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலா் எல். ரமேஷ் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த முகாமில், துப்புரவுப் பணியாளா்கள், சுய உதவிக்குழு பணியாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் என 100-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவா் சோமசுந்தரம் தலைமையிலான குழுவினா் மருத்துவப் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினா்.
முகாமில் பங்கேற்றேறாருக்கு காய்ச்சல் பாதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, இலவசமாக மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டன.
வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஆா். அண்ணாதுரை, அதிராம்பட்டினம் பேரூராட்சித் துப்புரவு ஆய்வாளா் கே.அன்பரசன், சுகாதார ஆய்வாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றனா்.