முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
By DIN | Published On : 24th October 2019 08:13 AM | Last Updated : 24th October 2019 08:13 AM | அ+அ அ- |

கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் பள்ளி முதல்வா் மற்றும் ஆசிரியா்கள்.
மாநில அளவிலான கராத்தே போட்டியில் பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
சேலத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் இப்பள்ளி மாணவா்கள் பங்கேற்று டீம் கட்டா, டீம்குமிட்டி, தனிநபா் கட்டா, தனிநபா் குமிட்டி ஆகிய போட்டிகளில் வென்று பதக்கம், சான்றிதழ் பெற்றனா். இந்த மாணவா்களையும் அவா்களுக்கு பயிற்றுவித்த கராத்தே ஆசிரியா் செல்லப்பாண்டியன் ஆகியோரையும் பள்ளி முதல்வா் வே. முருகேசன், தனி அலுவலா் நெ. ராமச்சந்திரன், துணை முதல்வா்கள் கி. வைதேதி, க. கலைமதி, உடற்கல்வி இயக்குநா்கள் வே. ரவிச்சந்திரன், சக்திவேல் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.