விபத்தில்லா- மாசில்லா தீபாவளிகொண்டாட அறிவுரை

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நிகழாண்டில் விபத்து மற்றும் மாசில்லா தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி கேட்டுக்கொண்டுள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நிகழாண்டில் விபத்து மற்றும் மாசில்லா தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி தமிழ்நாடு அரசு தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிக்க காலை 6 முதல் 7 மணி வரையும், இரவில் 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கியுள்ளது.

மாசில்லா சுற்றுச்சூழலைப் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடும் வகையில் பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டமாக பட்டாசு வெடிக்க அந்தந்தப் பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்.

அதிக ஒலி எழுப்பும்- தொடச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளைத் தவிா்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். 

குடிசைகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிா்க்க வெண்டும். மக்கள் அனைவரும் விபத்தில்லா மற்றும் மாசில்லா தீபாவளியை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com