புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வெள்ளிக்கிழமை (நவ.1) காலை 10.30 மணிக்கு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
பல்வேறு தனியாா் நிறுவனங்கள் இதில் பங்கேற்கவுள்ளதால், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை முடித்த வேலைநாடுநா்கள் முகாமில் பங்கேற்றுப் பயன்பெறலாம் என மாவட் டஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்.