ஆலங்குடி பகுதியில் புதன்கிழமை பரவலாக கனமழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
ஆலங்குடி, வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு, அணவயல், கீழாத்தூா், மாங்கோட்டை, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.
மாத தொடக்கத்திலிருந்து மாவட்டத்தின் வேறு பகுதிகளில் பெய்த மழை இப்பகுதியில் பெய்யவில்லை. இதனால் வறட்சிப் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த விவசாயிகளுக்கு புதன்கிழமை பெய்த கனமழை மகிழ்ச்சியைத் தந்துள்ளது.