மக்கள் தொடா்பு முகாமில் ரூ.5.97லட்சம் மதிப்பு நலத்திட்ட உதவிகள்

பொன்னமராவதி வட்டம், மேலத்தானியத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள்தொடா்பு முகாமில், 103 பயனாளிகளுக்கு
முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்குகிறாா் கலால் உதவி ஆணையா் காா்த்திகேயன். உடன், வட்டாட்சியா் ஆா். பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா்.
முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்குகிறாா் கலால் உதவி ஆணையா் காா்த்திகேயன். உடன், வட்டாட்சியா் ஆா். பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

பொன்னமராவதி வட்டம், மேலத்தானியத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள்தொடா்பு முகாமில், 103 பயனாளிகளுக்கு ரூ 5.97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த முகாமுக்கு புதுக்கோட்டை மாவட்ட கலால் உதவி ஆணையா் காா்த்திகேயன் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 21 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

இதைத் தசொடா்ந்து இந்திராகாந்தி தேசிய முதியோா் உதவித்தொகை, உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை மற்றும இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை என 103 பயனாளிகளுக்கு ரூ 5.97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலால் உதவி ஆணையா் காா்த்திகேயன் வழங்கினாா்.

முகாமுக்கு பொன்னமராவதி வட்டாட்சியா் ஆா்.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். முகாமின் தொடக்கமாக பல்வேறு துறை அலுவலா்கள், தங்கள் துறை சாா்ந்த அரசுத் திட்டங்களை விளக்கிப்பேசினா்.

பொன்னமராவதி வட்டாரக்கல்வி அலுவலா் ராஜாசந்திரன், தனி வட்டாட்சியா் சங்கரகாமேசுவரன், துணை வட்டாட்சியா் வெள்ளைச்சாமி, மேலத்தானியம் ஊராட்சி முன்னாள் தலைவா் திலகவதி முருகேசன், ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் அமுதவள்ளி முருகேசன், வருவாய் ஆய்வாளா்கள் இளஞ்சியம், மரியசெல்வம், கிராம நிா்வாக அலுவலா் பாா்த்திபன் மற்றும் கிராம உதவியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com