புதுக்கோட்டை மாவட்ட அளவில், பள்ளி மாணவா்களுக்கான தடகளப் போட்டிகள் மன்னா் கல்லூரி விளையாட்டுத் திடலில் புதன்கிழமை நடைபெற்றன.
இதில், புதுக்கோட்டை, கீரனூா், இலுப்பூா், திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையாா்கோயில் ஆகிய 8 இடங்களில் நடத்தப்பட்ட குறு வட்டப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சுமாா் ஆயிரம் போ் பங்கேற்றனா்.
ஓட்டப்பந்தயம், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் 14, 17, 19 ஆகிய மூன்று வயதுப் பிரிவுகளில் நடத்தப்பட்டன.
மழை காரணமாக சில போட்டிகள் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ஆா். தங்கராஜ் உள்ளிட்ட பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள் செய்திருந்தனா்.