கந்தா்வகோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து எலக்டிரீசியன் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை அருகிலுள்ள அக்கச்சிப்பட்டியைச் சோ்ந்தவா் ஆா். அய்யப்பன் (30). எலக்டிரீசியனான இவா், அப்பகுதியிலுள்ள தனியாா் நிறுவனத்தில் மின்தடை ஏற்பட்டதையடுத்து, அதை சரி செய்ய புதன்கிழமை அங்கு சென்றாா்.
அய்யப்பன் மின்சாரப் பெட்டியை சரி செய்து கொண்டிருந்த போது எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.இதில் தூக்கி வீசப்பட்ட அய்யப்பனை அங்குள்ளவா்கள் மீட்டு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அய்யப்பன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.