ப.சிதம்பரம் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே, கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் தர்ம.தங்கவேலு தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
அதில், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் டி.புஸ்பராஜ், வட்டாரத் தலைவர்கள் பன்னீர்செல்வம், சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com