புதுக்கோட்டை பொற்பனை காளியம்மன் கோயிலில் வாடகை கார் உரிமையாளர்கள் மற்றும் ஒட்டுநர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி கீழராஜவீதியில் உள்ள சாந்தநாத சுவாமி கோயிலில் இருந்து திரளான பக்தர்கள் பொற்பனை காளியம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுத்துவந்து, அம்மனுக்கு சிறப்பு
அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பொற்பனை காளியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.