சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே. தஹிலராமாணீயின் இடமாற்றத்தைக் கண்டித்து , புதுக்கோட்டை வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹிலராமாணீ மேகாலயா மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவரது மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.தலைமை நீதிபதியின் இடமாற்றத்தைக் கண்டித்து தமிழ்நாடு- புதுச்சேரி வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ,அனைத்துக் கீழமை நீதிமன்றங்களிலும் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு செய்ய அழைப்புவிடுக்கப்பட்டது.
இதன்படி, புதுக்கோட்டை வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணிகள் புறக்கணிக்கப்பட்டன. இதனால் நீதிமன்றப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.