மத்திய நீர்வள அமைச்சகம், குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை ஆகியவற்றின் சார்பில் நடத்தப்படும் ஊரக தூய்மைக் கணக்கெடுப்பில் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
ள்ள்ஞ்2019 என்ற செயலியை ஆன்ட்ராய்டு வசதியுள்ள செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு அதில் கேட்கப்படும் 4 கேள்விகளுக்குப் பதில் அளித்து புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரம் குறித்த கருத்துகளைப் பதிவிடலாம். ஆன்ட்ராய்டு வசதி இல்லாதவர்கள் 1800 572 0112 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் அழைத்து தூய்மை குறித்த கருத்துகளைப் பதிவு செய்யலாம்.