செப். 14-இல் மக்கள் நீதிமன்றம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வரும் செப். 14ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வரும் செப். 14ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது. 
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு இந்த மக்கள் நீதிமன்றங்கள் மூலம் சமரசத் தீர்வு காண முடியும். 
இதனால் நீதிமன்றக் கட்டணங்களைத் திரும்பப் பெறலாம். மேல்முறையீடு கிடையாது. நீதிமன்றத் தீர்ப்பு நகல் உடன் வழங்கப்படும். வெற்றி பெற்றவர் - தோற்றவர் என்ற எண்ணம் கிடையாது. வழக்காடிகள் செலவின்றி நீதியைப் பெறலாம். நிலுவையில் இல்லாத வேறு சட்டப்பிரச்னைகளிலும் தீர்வு காண முடியும்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த மக்கள் நீதிமன்றத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அழைப்புவிடுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com