பொன்னமராவதியில் அஞ்சல்துறை சார்பில், ஆதார் சிறப்பு முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகம் எதிரிலுள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றுவரும் முகாம் சனிக்கிழமை வரை நடைபெறும்.புதிதாக ஆதார் அட்டை எடுத்தல், முகவரி மாற்றம், பிறந்ததேதி திருத்தம் , பெயர் திருத்தம் , செல்லிடப்பேசி எண் மாற்றம் ஆகிய பணிகள் விழித்திரை பதிவு, கைரேகை, புகைப்படம் எடுத்தல் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எனவே பொதுமக்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.