காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

அனைத்துத் துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


அனைத்துத் துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பா. உத்தமன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சோ. சங்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில சங்கத்தின் 75ஆம் ஆண்டு பவள விழா மாநாட்டுக்குத் திரளாகச் செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அனைத்துத் துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவில் துணைச் செயலர் எஸ். ராஜேந்திரன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com