புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சனிக்கிழமை மஞ்சள்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் அழியாநிலை ஆஞ்சநேயர்.
புரட்டாசி மாத சிறப்பு வழிபாட்டில் முதலாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு காலையில் கணபதி ஹோமம், லெட்சுமி நரசிம்ம ஹோமம் நடைபெற்றது.தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், கூட்டுவழிபாடு, தீபாராதனை காட்டப்பட்டது, பின்னர் அன்னதானமும், கோபூஜையும் நடைபெற்றன. இரவு 7.30-க்கு மஞ்சள்காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை அழியாநிலை ஆஞ்சநேயர் நற்பணி மன்றத்தினர் செய்தனர்.