காந்தி பிறந்த 150ஆவது ஆண்டு நிகழ்ச்சி

புதுக்கோட்டை குளத்தூரிலுள்ள மகாத்மா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் மகாத்மா காந்தியின் பிறந்த 150ஆவது ஆண்டு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.


புதுக்கோட்டை குளத்தூரிலுள்ள மகாத்மா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் மகாத்மா காந்தியின் பிறந்த 150ஆவது ஆண்டு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தாளாளர் டி. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை வாசகர் பேரவையின் செயலர் பேராசிரியர் சா. விஸ்வநாதன் கலந்து கொண்டு, அரிய புகைப்படக் கண்காட்சியை வைத்து மாணவ, மாணவிகளுக்கு காந்தியடிகளின் வரலாற்றை விளக்கியும், மகாத்மா காந்தியின் படத்தைத் திறந்து வைத்தும் பேசினார்.
போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளில் சிலர் காந்தி போல வேடமணிந்தும் வந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com