பெண்ணைக் காணவில்லை எனப் புகார்

இலுப்பூர் அருகே மாயமான இளம் பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.இலுப்பூர் அருகேயுள்ள வெண்மணியைச் சேர்ந்தவர் சுரேஷ் மனைவி


இலுப்பூர் அருகே மாயமான இளம் பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.
இலுப்பூர் அருகேயுள்ள வெண்மணியைச் சேர்ந்தவர் சுரேஷ் மனைவி மங்கையர்க்கரசி (29), இவர் இலுப்பூர் ஜீவா நகரில் உள்ள தான் தாய் வீட்டில் தங்கி இருந்து விராலிமலை அருகேயுள்ள தனியார் கால்ஸ் வடிப்பகத்தில்(டிஸ்ட்லரீஸ்) பணியாற்றி வந்தார்.  இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தனது பெண் குழந்தையை அழைத்து சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லையாம். இவரது தாய் தனது உறவினர், நண்பர்களுடன் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லையாம். 
இதுகுறித்து தாய் இந்திராணி இலுப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com