பொன்னமராவதியில் தலைக்கவசம் அணிந்து வந்தோருக்குப் பாராட்டு

பொன்னமராவதியில் காவல் துறை சார்பில் தலைக்கவசம்  அணிந்து சென்ற இரு சக்கரவாகன ஒட்டிகளுக்கு பாராட்டும்,  தலைக்கவசம் அணியாதவர்களை எச்சரித்து சாலைப் பாதுகாப்பு துண்டுப்பிரசுரங்களும்


பொன்னமராவதியில் காவல் துறை சார்பில் தலைக்கவசம்  அணிந்து சென்ற இரு சக்கரவாகன ஒட்டிகளுக்கு பாராட்டும்,  தலைக்கவசம் அணியாதவர்களை எச்சரித்து சாலைப் பாதுகாப்பு துண்டுப்பிரசுரங்களும் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளர் பி. தமிழ்மாறன் அறிவுறுத்தலின் பேரில் பேருந்து நிலையம், அண்ணாசாலை பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான காவலர்கள் தலைக்கவசம் அணிந்து வந்த  இருசக்கர வாகன ஒட்டிகளை கைகுலுக்கி பாராட்டினர். 
அதுபோல தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஒட்டிகள், சீட் பெல்ட் அணியாத கார் ஒட்டுநர்களை எச்சரித்து விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com