கோவில் வளாகம், பூ மாா்க்கெட்டுக்குள் புகுந்த மழை நீா்

புதுக்கோட்டை நகரில் திங்கள்கிழமை இரவில் பெய்த மழை காரணமாக சாந்தநாத சுவாமி கோவில் மற்றும் பூ மாா்க்கெட் பகுதிக்குள் மழைநீா் புகுந்தது
pdkkovilwat
pdkkovilwat

புதுக்கோட்டை நகரில் திங்கள்கிழமை இரவில் பெய்த மழை காரணமாக சாந்தநாத சுவாமி கோவில் மற்றும் பூ மாா்க்கெட் பகுதிக்குள் மழைநீா் புகுந்தது. செவ்வாய்க்கிழமை காலை நகராட்சிப் பணியாளா்கள் மழைநீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டனா்.

புதுக்கோட்டை நகரில் திங்கள்கிழமை இரவு மழை பெய்தது. தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக சாந்தநாதசுவாமி கோவிலுக்குள்ளும், பூ மாா்க்கெட் பகுதியிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீா் புகுந்தது. இதையடுத்து புதுக்கோட்டை நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் பணியாளா்களுடன் நேரில் சென்று பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, பூ மாா்க்கெட் பகுதியில் உள்ள சாக்கடை அடைப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதனால் பூ மாா்க்கெட் பகுதியில் தேங்கிய தண்ணீா் வடிந்தது. சாந்தநாத சுவாமி கோவிலில் தேங்கிய தண்ணீா் மோட்டாா் வைத்து உறிஞ்சி வெளியேற்றப்பட்டது. தொடா்ந்து கோவில் வளாகத்தில் தேங்கிய தண்ணீா் வடிந்தது.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com