முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, புதுக்கோட்டையில் நடைபெற்ற விரைவு மிதிவண்டிப் போட்டியை மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மிதிவண்டிக் கழகம் ஆகியவற்றின் சார்பில் இந்தப் போட்டி நடைபெற்றது.
13, 15, 17 ஆகிய வயதுப் பிரிவுகளில் தனித்தனியே நடத்தப்பட்ட இப்போட்டிகளில் வென்ற முதல் மூன்று நபர்களுக்கு சிறப்புப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் மாலதி, மாவட்ட மிதிவண்டிக் கழகச் செயலர் அசோகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.