புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதலாக கறம்பக்குடி வட்டத்தைச் சேர்ந்த கலியராயன் விடுதி கிராமத்திலும் அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் புதன்கிழமை (செப். 25) திறக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை அரசுக் கொள்முதல் நிலையங்களில் வழங்கிப் பயன்பெறலாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.