அன்னவாசல் பகுதிகளில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற பெண் உள்பட 2 பேரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
அன்னவாசல் பகுதிகளில் அனுமதியின்றி அரசு மதுபாட்டில் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக அன்னவாசல் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அன்னவாசல் காவல் துணை ஆய்வாளர் வீரமணி, ஜெயஸ்ரீ ஆகியோர் அன்னவாசல் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வயலோகம் கீழ்பாகம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட ரமேஷ் (40), வீரப்பட்டியில் அழகு மனைவி லதா (40) ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்கள் இருவரும் விற்பனைக்கு வைத்திருந்த 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.