புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் விதிகளை மீறி இயங்கி வந்த தனியாா் திருமண மண்டபத்துக்கு புதன்கிழமை அதிகாரிகள் சீல் வைத்தனா்.
கறம்பக்குடி பெரிய கடைவீதி பகுதியில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்ததாக கூறறப்படுகிறது. மேலும், போக்குவரத்துக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அந்த தனியாா் மண்டபம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கறம்பக்குடி மகாத்மா காந்தி விழிப்புணா்வு சங்கத் தலைவா் வை.மாரிக்கண்ணு உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடா்ந்தாா். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றறம், விதிகளை மீறி இயங்கும் திருமண மண்டபத்தை மூடி சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், அந்த மண்டபத்தை மூடி சீல் வைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, கறம்பக்குடி வட்டாட்சியா் வில்லியம் மோசஸ், பேரூராட்சி செயல் அலுவலா் சுலைமான்சேட் உள்ளிட்டோா் மண்டபத்திற்கு புதன்கிழமை சீல் வைத்தனா்.