கந்தர்வகோட்டை தச்சங்குறிச்சி கூட்டுறவு வங்கியில் கறவை மாடு மற்றும் சுய உதவிக்குழுவினருக்கு கடன் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தச்சங்குறிச்சி கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற விழாவிற்கு கந்தர்வகோட்டை எம்எல்ஏ நார்த்தாமலை பா. ஆறுமுகம் தலைமை வகித்தார். அனைவரையும் வங்கிச் செயலாளர் ஆபேல் வரவேற்றார். பயனாளிகளுக்கு கறவை மாடுகள் மற்றும் சுயஉதவிக் குழுவினருக்கான கடன்களை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ரா. சின்னதம்பி வழங்கினார்.
விழாவில், 114 பேருக்கு கறவை மாடு வாங்குவதற்கு கடனாக ரூ. 46 லட்சத்து 90 ஆயிரம் மற்றும் 20 சுய உதவிக்குழுவினருக்கு ரூ. 2 லட்சம் கடனும் வழங்கப்பட்டது.