தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க கிளை மாநாடு

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க பொன்னமராவதி வட்டக் கிளை மாநாடு கொப்பனாபட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.


தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க பொன்னமராவதி வட்டக் கிளை மாநாடு கொப்பனாபட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டிற்கு வட்டத் தலைவர் பழனியாண்டி தலைமை வகித்தார். வட்ட செயலர் காடப்பிள்ளை முன்னிலை வகித்தார். சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் சுப்பையா  சிறப்புரையாற்றினார். மாநாட்டில், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும். கிராம உதவியாளர்கள் பதவி உயர்வு பெற 10 ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகளாக குறைக்கவேண்டும் என்பன  உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநாட்டில், பொன்னமராவதி வட்டத்திற்குள்ப்பட்ட கிராம ஊழியர்கள் பங்கேற்றனர். வட்டப்பொருளர் சின்னத்துரை நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com