தொழிலாளியை தாக்கியவர் கைது

விராலிமலை வட்டம், சூரியூர் ஊராட்சி வில்லாரோடையைச் சேர்ந்த  சன்னாசி மகன் கணேசன் (38).  விவசாயக் கூலித் தொழிலாளியாக  வேலைபார்த்து வருகிறார்.  


விராலிமலை வட்டம், சூரியூர் ஊராட்சி வில்லாரோடையைச் சேர்ந்த  சன்னாசி மகன் கணேசன் (38).  விவசாயக் கூலித் தொழிலாளியாக  வேலைபார்த்து வருகிறார்.  
இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்  முனியாண்டி மகன் சாமிக்கண்ணு (38). இவர்கள் இருவருக்கும் இடத்தகராறு இருந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. 
இதில், சாமிக்கண்ணு  கணேசனை கட்டையால் தாக்கியதில், அவருக்கு கை எலும்பு முறிந்து விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் மாத்தூர் காவல் துணை ஆய்வாளர்  கோவிந்தராஜ், வழக்கு பதிவு செய்து கணேசனைத் தாக்கிய சாமிக்கண்ணுவை கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தார். தொடர்ந்து, கீரனூர் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com