புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே மனைவி இறந்த துக்கம் தாளாமல் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட முதியவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
பொன்னமராவதி அருகே உள்ள மரவாமதுரைச் சேர்ந்தவர் ப.சுப்பையா(57). விவசாயக் கூலித்தொழிலாளி. இவரது மனைவி கருப்பாயி(55). தம்பதியின் 3 மகன்களுக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில், கருப்பாயி கடந்த வெள்ளிக்கிழமை உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.
இதனால், துக்கம் தாளாத சுப்பையா பிளேடு மூலம் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். இதையடுத்து, உடனடியாக வலையபட்டி அரசு பாப்பாயி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்பையா மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து காரையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.