கந்தர்வகோட்டை ஒன்றியம் , கோமாபுரம் அரசுப் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான கபாடி போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
தஞ்சாவூர் மண்டல அளவில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட 14 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு கபாடி அணிக்கான தேர்வு அண்மையில் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில், கந்தர்வகோட்டை ஒன்றியம் , கோமாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவிகள் கல்கி, பைரவி ஆகியோர் தமிழ்நாடு கபடி அணிக்கான தேர்வில் கலந்துகொள்ள உள்ளனர்.
தேர்வுபெற்ற மாணவிகள் மற்றும் பயிற்சியளித்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சி . முத்துக்குமரன் ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் முனியய்யா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.