புதுக்கோட் டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூரில் பாசன வாய்க்கால்களை அப்பகுதி இளைஞர்கள் சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர்.
செரியலூரில் உள்ள செரியாக்குளத்திற்கு நீர்செல்லும் வாய்க்கள், பாசனவாய்க்கால்கள் பல வருடங்களாக பராமரிப்பின்றி உள்ளதால், ஆக்கிரமிப்பு அதிகரித்து நீர்செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்களது சொந்த செலவில் பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்கால்களை தூர்வாரும் பணியைத் தொடங்கியுள்ளனர். சுமார் 2 கி.மீ தொலைவுள்ள வாய்க்காலை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.