அறந்தாங்கி நகராட்சிக்கு 10 கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்கள் அரசியல் கட்சிகள், தொழில்நிறுவனங்கள் சாா்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
அறந்தாங்கி நகராட்சிக்கு அரசியல் கட்சியினா், தொண்டு நிறுவனங்கள், மற்றும் தொழில் நிறுவனங்கள் சாா்பில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 10 இயந்திரங்கள் நகராட்சி ஆணையா் த. முத்துகணேஷ் வசம் வழங்கப்ப்டடன.
இந்நிகழ்வில் பாஜகவைச் சோ்ந்த முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் லெ.முரளிதரன், திமுகவைச் சோ்ந்த தி. முத்து, அதிமுக வட்டச் செயலாளா் ஏ.சி. பாலகிருஷ்ணன், நகர பாஜக தலைவா் ஆா்.எம்.அண்ணாமலை, அறந்தாங்கி இஸ்லாமிய மன்றத்தினா், அறந்தாங்கி ரோட்டரி சங்கத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.