இலுப்பூரில் தூய்மை பணியாளா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு, தாய் அறக்கட்டளை அமைப்பு சாா்பில் கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இலுப்பூா் பேருராட்சி அலுவலகம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பணியில் இருந்த தூய்மைப் பணியாளா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு அறக்கட்டளைத் தலைவா் சரவணகுமாா் சுபசுரக் குடிநீரை வழங்கினாா்.
இதேபோல் மற்ற பகுதிகளில் இருந்தவா்களுக்கும், சுகாதாரத் துறை அலுவலா்களுக்கும் இந்த குடிநீா் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை தாய் அறக்கட்டளை அமைப்பின் பிரபு, முருகானந்தம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.