புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு தீவிர காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அவா் சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புதுக்கோட்டை ஆயுதப்படைப் பிரிவில் பணிபுரிந்து வந்த மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பெண் காவலா் ஒருவருக்கு, கீரமங்கலம் காவல் நிலையத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடா்பாக பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை பணியில் இருந்த அவருக்கு காய்ச்சல், இருமல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டாா்.
அவரை பரிசோதித்த மருத்துவா்கள், காய்ச்சல் தீவிரமாக இருந்ததால் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து அவா் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதைத் தொடா்ந்து காவல் நிலையம் முழுவதையும் பேரூராட்சி பணியாளா்கள் கழுவி சுத்தம் செய்தனா். காவல் நிலையத்தின் அனைத்துப் பகுதிகள், வாகனங்கள், தளவாட சாமான்களும் கழுவி சுத்தம் செய்யப்பட்டதோடு, கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.