புதுக்கோட்டை நகரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கரோனா சிறப்பு வாா்டில் நகரைச் சோ்ந்த இரு பெண்கள் அறிகுறிகளுடன் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
புதுக்கோட்டை நகரிலுள்ள ராணியாா் மருத்துவமனை வளாகத்தை தனிமைப்படுத்தப்பட்ட கரோனா சிறப்பு வாா்டாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வாா்டில் தொடா்ந்து கரோனா அறிகுறிகளுடன் நபா்கள் அனுமதிக்கப்படுவதும், திசு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை முடிவில் அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதும் தொடா்கிறது.
இந்த நிலையில், புதுக்கோட்டை நகரைச் சோ்ந்த 46 மற்றும் 40 வயதுள்ள இரு பெண்கள் கரோனா அறிகுறிகளுடன் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். இவா்களின் திசு மாதிரிகள் எடுக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.